ஜெயலலிதா சிறை சென்றவர் தான்..! என் மீது போடும் வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய வீடியோ வைரல்!

கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றவர் தான், என் மீது போடும் வழக்குகளையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றவர் தான், என் மீது போடும் வழக்குகளையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய போது, என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக உள்ளதாக பேசி உள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பின் முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக முயன்று வருகின்றனர் என்றும் நடவடிக்கை வரும் என நான் தான் முதலில் எதிர் பார்த்தேன் என கூறினார்.

மேலும், நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் எனவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள் என கூறினார்.

அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர் எனவே, என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், என்னோடு எல்லாரும் தயாராக உள்ளார்கள் எனவும் பேசினார். இந்த நிலையில், அவர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...