கோவை: இன்று கோவை விமான நிலையத்தில், திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 0.25mm 92 லைவ் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: இன்று கோவை விமான நிலையத்தில், திருப்பூர் தொழிலதிபரிடம் இருந்து 0.25mm 92 லைவ் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு பணியில், மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், கலால் பிரிவு போலீசார், மற்றும் விமான நிலைய போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திருப்பூரைச் சேர்ந்த சசிகுமார் என்ற தொழில் அதிபர் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்த போது, அதில் 92 பிஸ்டல் தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அளவு 0.25mm ஆகும்.
உடனடியாக, சி.ஐ.எஸ்.எப் போலீசார் அதை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுக்கவே, போலீசார் அவரை பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், இன்று காலை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
எதற்காக 92 தோட்டாக்களை மொத்தமாக எடுத்துச் சென்றார்? இதற்கு எப்படி அனுமதி பெற்றார்? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலைய பாதுகாப்பு பணியில், மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், கலால் பிரிவு போலீசார், மற்றும் விமான நிலைய போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திருப்பூரைச் சேர்ந்த சசிகுமார் என்ற தொழில் அதிபர் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்த போது, அதில் 92 பிஸ்டல் தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அளவு 0.25mm ஆகும்.
உடனடியாக, சி.ஐ.எஸ்.எப் போலீசார் அதை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுக்கவே, போலீசார் அவரை பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால், இன்று காலை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
எதற்காக 92 தோட்டாக்களை மொத்தமாக எடுத்துச் சென்றார்? இதற்கு எப்படி அனுமதி பெற்றார்? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.