கோவையில் எல்.இ.டி பல்புகள் சரிபார்க்கும் பணி! மக்களுக்கு மகிழ்ச்சி!

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக எல்.இ.டி பல்புகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சி சார்பாக எல்.இ.டி பல்புகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அனைத்து வீதிகள் மற்றும் தெருக்களுக்கு எல்.இ.டி பல்புகள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகள் மற்றும் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டது.



இந்த நிலையில் கோவை கணபதி 3 நம்பர் பேருந்து நிலையம், ராஜவீதி, சங்கனூர் சாலை, கோபால்சாமி கோயில் வீதி, பழைய சத்தி ரோடு, மணியகாரம்பாளையம், சி. எம். எஸ். ஸ்கூல் பகுதி ரவீந்தரநாத் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி மூலமாகப் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் எரியவில்லை.

அதனால் தொடர்ந்து பொதுமக்கள் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அதிகாரிகள் உடைய நடவடிக்கையின் பேரில் வேன்கள் மூலமாக கிரேன்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக அனைத்து எல்.இ.டி பல்புகள் சரியாக இருக்கிறதா? என்று அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து பல்பை எரிய வைத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துச் சென்றனர்.



தொடர்ந்து பல கோரிக்கைகள் வைத்த பிறகு இன்று எல்இடி பல்புகள் பழுது பார்க்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...