கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் - தோட்டக்கலைத்துறை தகவல்!

கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

கிணத்துக்கடவு வட்டார பகுதியில் காய்கறிச் செடிகள், பழச்செடிகள் மருத்துவ பயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்படுகிறது என்றும் சிறு குறு மற்றும் இதர விவசாயிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்றும் ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது.



நடப்பாண்டில் சொட்டுநீர் பாசனம் அமைத்த பயனாளிகளுக்கு துணைநிலை நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க 50 சதவீதம் மானியம் அனுமதிக்கப்படுகிறது என்றும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் சிறு குறு விவசாயி சான்று, 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 9585098230, 9965562700 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...