விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என தி இந்து வாசகர் திருவிழாவில் சசிகுமார் பேச்சு

தி இந்து தமிழ் நாளிதழின் நான்காம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு இன்று (டிச. 4) கோவையில் வாசகர் திருவிழா நடைபெற்றது. 



கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் என பல பகுதிகளில் இருந்தும் தி இந்து நாளிதழ் வாசகர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார் பேசியதாவது:-



தி இந்து நாளிதழ் மக்கள் மத்தியில் தனி தடம் பதித்து உள்ளது. வாசகரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு செய்தியினை கொண்டு சென்று சேர்ப்பதில் சிறப்பை பெற்றது தி இந்து. 

நாம் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் விவசாயிகள் பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வாசகர்கள் விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற உதவ வேண்டும்'' என்றார்.



இதைத்தொடர்ந்து, வாசகர்கள் மற்றும் சசிகுமாருக்கு இடையே சிறிது நேரம் கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சசிகுமார் பதிலளித்தார். அப்போது, திரைக்கதையில் காண்பிக்கப்படும் வன்முறை சம்பவங்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதை தடுக்கவும் குறைக்கவும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...