டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெற உள்ள தமிழக தடகள வீரர்கள் 7 பேருக்கு ஊக்கத்தொகை தலா 5 இலட்சம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு அறிவிப்பு

கோவை: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(06/07/2021 செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.


கோவை: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(06/07/2021 செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 பேர், ஆடவருக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 பேர், கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் 2 ஆடவா், 3 மகளிர் ஆகியோர் உள்ளார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இவர்களைத் தவிர ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு தமிழக வீரர்களும் இந்தியத் தடகள அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 4*400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், இவர்கள் 5 பேருக்கும் தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு செல்லும் 7 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...