கோவையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு..!

கோவை: கோவையில் ஹோட்டல் ஒன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. அதை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றினர்.


கோவை: கோவையில் ஹோட்டல் ஒன்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. அதை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றினர்.

கோவை காந்திபார்க் சுக்ரவார்பேட்டை பகுதியில் பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்தநிலையில், கோயிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடத்தை ஆக்கிரமித்து சிறுவாணி உணவகம் என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வந்தது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த உணவகத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் தெற்கு தாசில்தார் முன்னிலையில் ஊழியர்கள் இன்று இடித்து இடம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படுவதன் காரணமாக சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...