கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.67, 69க்குட்பட்ட இராமநாதபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நஞ்சுண்டாபுரம் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (06.07.2021) ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் இராமநாதபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் முன்களப்பணியாளர்களிடம் கொரோனா தடூப்புபபணிகளை குறித்து அறிவுறுத்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களின் பணி மிக முக்கிய பணியாகும். இப்பணிகளை மிகவும் சிறப்பாக செய்திட வேண்டும். பணியின் போது, வீடு தவறாமல் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

குறிப்பாக, வீடூ வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, ஆகியவற்றை கண்டறிந்து அதன் விபரங்களை குறித்து கோவிட்-19 கள ஆய்வு பதிவேடுகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தொடாந்து, வார்டு எண.75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும், புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் டாக்டா்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார் பின்னர், மத்திய மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட வ.ஊ.சி பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர், ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலா் மரு.ராஜா, கிழக்கு மண்டல உதவி ஆணையாளார், முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.67, 69க்குட்பட்ட இராமநாதபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நஞ்சுண்டாபுரம் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (06.07.2021) ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் இராமநாதபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் முன்களப்பணியாளர்களிடம் கொரோனா தடூப்புபபணிகளை குறித்து அறிவுறுத்தினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களின் பணி மிக முக்கிய பணியாகும். இப்பணிகளை மிகவும் சிறப்பாக செய்திட வேண்டும். பணியின் போது, வீடு தவறாமல் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாக, வீடூ வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, ஆகியவற்றை கண்டறிந்து அதன் விபரங்களை குறித்து கோவிட்-19 கள ஆய்வு பதிவேடுகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றார்.
தொடாந்து, வார்டு எண.75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும், புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் டாக்டா்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார் பின்னர், மத்திய மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட வ.ஊ.சி பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர், ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலா் மரு.ராஜா, கிழக்கு மண்டல உதவி ஆணையாளார், முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.