கோவை: ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மை பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால், இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மை பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால், இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் உட்பட புறநகர் முழுவதும் கடந்த 5 மாதங்களாக தூய்மை நிரந்தரப் பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவரும் கொரோனா சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு அவர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மைப் பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால் இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, மாலை வரை போராட்டம் நீடித்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஊராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பாக, கலைந்து சென்றனர். முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 10 பேர் திடீரென வேலை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் உட்பட புறநகர் முழுவதும் கடந்த 5 மாதங்களாக தூய்மை நிரந்தரப் பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் என அனைவரும் கொரோனா சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு அவர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்துள்ளது. இந்தநிலையில், ஆலந்துறை பேரூராட்சிக்குட்பட்ட 10 தூய்மைப் பணியாளர்களை திடீரென வேலை இழப்பு செய்ததால் இன்று ஆத்திரமடைந்த அவர்கள் ஆலந்துறை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, மாலை வரை போராட்டம் நீடித்தது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஊராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பாக, கலைந்து சென்றனர். முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 10 பேர் திடீரென வேலை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.