குறிச்சி குளத்தில் கழிவுகள் கொட்டிய வாகனத்தை சிறைபிடித்த பாதுகாப்பு இயக்கத்தினர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது குறிச்சி குளம். சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், ஆகாயத் தாமரைகளின் அதிகப்படியான வளர்ச்சியினாலும் இக்குளம் வரண்டு காணப்படுகிறது. தற்போது, பல தொழிற்சாலை நிறுவனத்தினர் தங்களது கழிவுகளை இக்குளத்தில் கொட்டி வருவதாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இந்த குறிச்சி குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டது. 

இந்நிலையில், இன்று குறிச்சி குளத்தில் வாகனம் மூலம் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட முற்பட்டனர். அதனைக் கண்ட குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கழிவுகளை கொட்டிய அந்த வாகனத்தை சிறை

பிடித்து பொதுப்பணித் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.





இதைத்தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் அப்பகுதிக்கு வராததால் குப்பை கொட்டிய நபரிடமே அதனை எடுக்க வைத்து, பின் எச்சரித்து அனுப்பப்பட்டது.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...