திருப்பூரில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நான்கு வாலிபர்கள் கைது... மதுபாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல்..!

கோவை: திருப்பூரில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நான்கு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 950 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: திருப்பூரில் இருந்து கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த நான்கு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 950 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை உட்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், அண்டை மாநிலங்களிலிருந்து மதுவைக் கடத்தி அதிக விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து திருப்பூர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு குடோனில் 4,000 மது பாட்டில்கள் பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு வாலிபர்கள் மதுபாட்டில்களைக் காரில் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருப்பூர் போலீஸார் கோவை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, போலீஸார் திருச்சி ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை செய்தபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.



இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் காரை சோதனை செய்தனர். அதில், 950 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த முத்துக்குமார் வயது 39, பிரேம் 26, கோபாலகிருஷ்ணன் 30, சூரியா 25, ஆகியோரை கைது செய்தனர்.



அவர்கள் காரில் கடத்தி வந்த 950 மது பாட்டில்கள் மற்றும் பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...