கோவை: வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணை 105 அடியை எட்டியுள்ளது.
கோவை: வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணை 105 அடியை எட்டியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையார் அணை 165 அடி உயரத்திற்கு தற்போது 105 அடி உயரம் தண்ணீர் உள்ளது. சோலையார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மேலும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 807.18 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 3235.36 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு 2819.32 டி எம் சி தண்ணீர் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு 105.36 அடி உயரமாக தண்ணீர் உள்ளது. வால்பாறை 3 மில்லி மீட்டர் மழை அளவும், நீரார் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லார் பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையார் அணை 165 அடி உயரத்திற்கு தற்போது 105 அடி உயரம் தண்ணீர் உள்ளது. சோலையார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மேலும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 807.18 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 3235.36 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு 2819.32 டி எம் சி தண்ணீர் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு 105.36 அடி உயரமாக தண்ணீர் உள்ளது. வால்பாறை 3 மில்லி மீட்டர் மழை அளவும், நீரார் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லார் பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.