திருப்பூரில் போலி ஆதார் கார்டுகளுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது..!

திருப்பூர்: தமிழகத்தின் பின்னலாடை நகரான திருப்பூரில் போலி ஆதார் கார்டுகளுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


திருப்பூர்: தமிழகத்தின் பின்னலாடை நகரான திருப்பூரில் போலி ஆதார் கார்டுகளுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் மேற்கு வங்கம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் வந்து, போலி ஆதார் உள்ளிட்டவை தயாரித்து அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பின்னலாடை நகரான திருப்பூர் போன்ற நகரங்களில் தங்குவதுண்டு. அதேபோல் உரிய பாஸ்போர்ட் உள்ளிட்டவை இன்றியும் தங்கியிருந்த சிலரையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். தற்போது மீண்டும் திருப்பூர் மாநகரில் யாரேனும் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்களா என அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், திருப்பூர் அம்மாபாளையம் ராக்கியாபாளையத்தில் வசித்து வந்த ஷிமுல் காஸி(30) பெருமாநல்லூர் காளம்பாளையத்தை சேர்ந்த மன்னன் மோல்லல்(31) திருப்பூர் சிட்கோ பொன்னாபுரம் பகுதியில் வசித்து வந்த சைஃபுல் இஸ்லாம்(40) ஆகிய 3 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது குறித்தும் மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 பேரும் திருப்பூரில் வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்கள். இதில் ஷிமுல் காஸி இரண்டு வருடங்களாகவும், மன்னன் மோல்லல், சைஃபுல் இஸ்லாம் ஆகியோர் 5 வருடங்களாகவும் திருப்பூரில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த ஆவணங்களைக் கைப்பற்றியதில் 2 போலி ஆதர்காடுகள் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தபட்டு வருகிறது. விசாரணை முடிந்து சென்னை புழல் சிறைக்கு 3 பேரும் அழைத்து செல்லப்படுவார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...