கோவை: குடும்பத்தினர்க்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட, கொரோனா அச்சத்தால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: குடும்பத்தினர்க்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட, கொரோனா அச்சத்தால் விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் வயது 50, விவசாயி, சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிலிருந்து வந்த அக்கா மகனுக்கு திடீரென ஒருநாள் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது தாயாருக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரையும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் முத்துராமலிங்கம் மனவேதனை அடைந்தார். மேலும் தனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் வயது 50, விவசாயி, சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிலிருந்து வந்த அக்கா மகனுக்கு திடீரென ஒருநாள் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது தாயாருக்கும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரையும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வீட்டில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் முத்துராமலிங்கம் மனவேதனை அடைந்தார். மேலும் தனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.