உதகை அரசு தலைமை மருத்துவமனையில் 40 நபர்களுக்கு மட்டுமே 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதம்!

நீலகிரி: உதகை அரசு தலைமை மருத்துவமனையில் டோக்கன் கொடுத்த 100 பேரில் 40 நபர்களுக்கு மட்டும் இன்று 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு வரிசையில் நின்றிருந்த மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: உதகை அரசு தலைமை மருத்துவமனையில் டோக்கன் கொடுத்த 100 பேரில் 40 நபர்களுக்கு மட்டும் இன்று 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு வரிசையில் நின்றிருந்த மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த வந்த நூறு நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழங்கப்பட்ட டோக்கனில் 40 பேருக்கு மட்டும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்திவிட்டு மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் பொதுமக்கள் மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



மேலும், இது பற்றி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கும் பொழுது முறையான பதில் அளிப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

இது குறித்து தகவலறிந்து வந்த மருத்துவர்கள் கூறும் போது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மருந்துகளை அனுப்ப வேண்டியிருந்ததால் டோக்கன் கொடுத்த அனைவருக்கும் இன்று வழங்க முடியவில்லை என்றும் டோக்கன் பெற்றவர்களுக்கு மீண்டும் நாளை வழங்கப்படும் என்றனர். இதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...