கோவை: சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு மாதங்களாகியும் பிடிபடாததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
கோவை: சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு மாதங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான்.
இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து, சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இதேபோல், வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இரண்டு மாதங்கள் கடந்தும் சிறுத்தை, கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும், கூண்டில் சிக்காமலும் போக்கு காட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதேசமயம், வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான்.
இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து, சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இதேபோல், வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இரண்டு மாதங்கள் கடந்தும் சிறுத்தை, கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும், கூண்டில் சிக்காமலும் போக்கு காட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதேசமயம், வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.