கோவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் - மாவட்ட ஆட்சியர்!

கோவை: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.


கோவை: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.



கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்தார். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கோவை மாவட்டத்தில் மே மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000க்கும் மேற்பட்டவர்களாக, அதாவது 38 விழுக்காடு இருந்தது.



தொடர்ந்து எடுக்கப்படும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது நோய் தொற்று 13 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரம், பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று தொற்று உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. முக கவசம் அணியாமலும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீதான நடவடிக்கை ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் தொடரும்.

மேலும், கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ல் பாதிக்கப்பட்டு 7 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளார்கள். கருப்பு பூஞ்சை நோயினால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசியைப் பொருத்தவரை தற்போது தட்டுப்பாடு இல்லை என்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 250 படுக்கை வசதிகள் உள்ளது. 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...