விளம்பரப்பலகை விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் ஒருவர் பரிதாப பலி

கோவை: கோவையில் ஹோட்டலின் விளம்பரப் பலகை விழுந்து மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் ஹோட்டலின் விளம்பரப் பலகை விழுந்து மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை, காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பிரிவு அருகே TN43 ஹோட்டல் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. கடையை ஒட்டி சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, கடையின் விளம்பரப் பலகை விழுந்ததில் அருகே கடை அமைத்து விற்பனை செய்து வந்த கணுவாய்ப்பாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் செல்வராஜ், குஞ்சா, பொன்னம்மாள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், செல்வராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், இன்று வியாபாரி செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலின் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்த மூவரில் வியாபாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...