நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியுள்ளது. இதன் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியுள்ளது. இதன் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற கிராமங்களில் நெய் மிளகாய் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் ‘நெய்மிளகாய்' அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட ‘பூத் ஜலக்கியா' என்ற மிளகாயின் காரத்தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால், நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.

‘‘குன்னூர் அருகேயுள்ள சோலாடா மட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால், வாயு தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறி, பலர் வாங்க்ச் செல்கின்றனர். இதற்கு தற்போது, கிலோ 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதன் விளைச்சலை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால், கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற கிராமங்களில் நெய் மிளகாய் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் ‘நெய்மிளகாய்' அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட ‘பூத் ஜலக்கியா' என்ற மிளகாயின் காரத்தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால், நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.
‘‘குன்னூர் அருகேயுள்ள சோலாடா மட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால், வாயு தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறி, பலர் வாங்க்ச் செல்கின்றனர். இதற்கு தற்போது, கிலோ 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதன் விளைச்சலை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால், கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.