கோவை: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 காரை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 காரை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்டை மாவட்டங்களான திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான மதுபாட்டில்களை கடத்தி வந்து பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் பொள்ளாச்சி சி.டி.சி காலனி அருகே நடத்திய வாகன சோதனையில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து 237 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வசந்த் என்பவர் காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 67 மது பாட்டில்களையும, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்டை மாவட்டங்களான திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான மதுபாட்டில்களை கடத்தி வந்து பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் பொள்ளாச்சி சி.டி.சி காலனி அருகே நடத்திய வாகன சோதனையில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடம் இருந்து 237 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வசந்த் என்பவர் காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 67 மது பாட்டில்களையும, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.