வால்பாறை வனப்பகுதியில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை குறித்து வன அதிகாரிகள் ஆய்வு


வால்பாறைக்கு உட்பட்ட கீழ் பறனை என்னும் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் தேயிலை சேகரிக்கும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.



இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சக்திவேல் தலைமையில் வன அதிகாரி சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்துகிடந்த சிறுத்தையினை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

கீழ் பறனை பகுதியில் தற்போது சிறுத்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களிடமும், தேயிலைத் தொழிலாளர்களிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுத்தை இறந்து ஒரு வாரம் கடந்திருக்கும். கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சிறுத்தை, சுமார் 2 வயது மதிக்கத்தக்கது'' என்றார்.

Newsletter

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...