கோவையில் வீட்டு உரிமையாளர் மனைவி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபரை தேடும் போலீஸ்!!

கோவை: கோவையில் வீட்டு உரிமையாளரின் மனைவி மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வாடகைதாரரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டு உரிமையாளரின் மனைவி மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வாடகைதாரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவரின் மனைவி கதீஜா (48). இவரது வீட்டில் அப்துல்லா என்பவர் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் மனைவி கதிஜா குறித்து அவர்கள் வீட்டில் வாடகைதாரராக குடியிருந்த அப்துல்லா என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவுகளை வெளியிட்டதாக தெரிகிறது.

இதுபற்றி கேள்விப்பட்ட கதிஜா அதிர்ச்சியடைந்து அப்துல்லாவிடம் கேட்டுள்ளார் .அப்போது அப்துல்லா, கதீஜாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்துல்லா மீது கதீஜா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த அப்த்துல்லா தலைமறைவாகி விட்டார். .புகாரின் பேரில் போலீசார் அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...