வால்பாறை: வால்பாறையில் பொள்ளாச்சி எம்பி நிதியில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வால்பாறை: வால்பாறையில் பொள்ளாச்சி எம்பி நிதியில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது தொகுதியில் இருந்து ரூ.33 லட்சம் ஒதுக்கினார்.
அதன்படி ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இயந்திரத்தை துவக்கி வைத்தார். மேலும் ஆனைமலை தேயிலை உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிசன் செறிவூட்டிகளை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், தேயிலை தோட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது தொகுதியில் இருந்து ரூ.33 லட்சம் ஒதுக்கினார்.
அதன்படி ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இயந்திரத்தை துவக்கி வைத்தார். மேலும் ஆனைமலை தேயிலை உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிசன் செறிவூட்டிகளை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், தேயிலை தோட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.