கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கிணத்துக்கடவு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார தலைவர் வித்யாசாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, நகர பொருளாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கிணத்துக்கடவு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு வட்டார தலைவர் வித்யாசாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, நகர பொருளாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.