கோவை: கோவையில் ரோந்தில் ஈடுபட்ட போலீசாரிடம் போதையில் தகராறு செய்த நபர்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கோவை: கோவையில் ரோந்தில் ஈடுபட்ட போலீசாரிடம் போதையில் தகராறு செய்த நபர்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பொது ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் சூலூரில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் மது போதையில் 3 பேர் சாலையில் திரிந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், போதையில் இருந்த மூவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் மேலும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போலீசார், அவர்கள் மூவரும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், தீபக், பிரகாஷ் என்பது தெரியவந்தது.
கள்ளத்தனமாக மது பாட்டில்களை வாங்கி வந்து மது அருந்தியது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மது போதை தெளிந்தவுடன் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தினர். போலீசாரிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிந்துள்ளனர்.
காவல்துறையினர் பணிக்கு இடையூறு செய்தது தவறு எனவும் மதுபோதையில் இதுபோன்ற தவறுகளை செய்ததாகவும் காவல்துறையினரின் பணியை மதிப்பதாகவும் வீடியோவில் மூவரும் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொது ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் சூலூரில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் மது போதையில் 3 பேர் சாலையில் திரிந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், போதையில் இருந்த மூவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் மேலும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போலீசார், அவர்கள் மூவரும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், தீபக், பிரகாஷ் என்பது தெரியவந்தது.
கள்ளத்தனமாக மது பாட்டில்களை வாங்கி வந்து மது அருந்தியது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மது போதை தெளிந்தவுடன் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தினர். போலீசாரிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிந்துள்ளனர்.
காவல்துறையினர் பணிக்கு இடையூறு செய்தது தவறு எனவும் மதுபோதையில் இதுபோன்ற தவறுகளை செய்ததாகவும் காவல்துறையினரின் பணியை மதிப்பதாகவும் வீடியோவில் மூவரும் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.