கோவை: கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விஜயலட்சுமி எனும் பெண் எனும் பெண் மாநகர காவல் ஆணையரடம் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விஜயலட்சுமி எனும் பெண் எனும் பெண் மாநகர காவல் ஆணையரடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த நான், கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வருகின்றேன். எனது 16 வயது, மகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன் கல்லூரி சென்ற என் மகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தேன்.

மாயமான மகள் ஆந்திராவில் இருப்பதாகவும், அங்கிருந்து செல்போனில் என்னை அழைத்தார். அதன் பின் நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளவில்லை. என் மகளுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. 4 மாதம் ஆகிய நிலையில் அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பது கூட தெரியவில்லை.
மேலும் எனது மகளை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞர் கடத்தி சென்று விட்டார். அவர் மீது துடியலூர் போலீசில் அதிக புகார்கள் உள்ளன. உடனடியாக எனது மகளை மீட்டு தர வேண்டும்.”
இவ்வாறு விஜயலட்சுமி புகாரில் கூறியுள்ளார்.