கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக கோவை சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் பெறப்படும் மருத்துவ சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக கோவை சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் பெறப்படும் மருத்துவ சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கோவையில் தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சைக்காக அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஏற்கெனவே முத்தூஸ், லட்சுமி ஆகிய இரு மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மனு மருத்துவமனை உட்பட மேலும் மூன்று மருத்துவமனைகள் மீது வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான மனு மருத்துவமனை மீது இன்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்ககப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை அளித்தார். அதில் தனது அண்ணன் மகள் ஆனந்தி, மருமகன் சின்னத்துரை, அண்ணி கற்பகம் ஆகியோர் கொரோனா காரணமாக மனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆனந்தியும், சின்னத்துரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கற்பகம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்று பேரின் சிகிச்சைக்காக மனு மருத்துவமனை நிர்வாகம் 29 லட்ச ரூபாய் விதித்துள்ளது.

இதில் 10 லட்சத்திற்கு மட்டுமே தங்களுக்கு ரசீது வழங்கியிருப்பதாகவும், மீதி் 19 லட்ச ரூபாய்க்கு பில் கொடுக்காமல் அலைகழிப்பதாகவும், பணமாகவே கட்டணத்தை செலுத்தும்படியும் ஆன்லைன் டிரான்சாக்ஸன் செய்ய அனிமதிப்பதில்லை எனவும் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை வழங்கியதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் கட்டிய தொகைக்கு பில் கொடுக்கவும், கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்ததற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக, இந்த மருத்துவமனை இரண்டு புகார்கள் வந்துள்ள நிலையில், இன்று அதே மருத்துவமனை மீது மூன்றாவதாக புகாரும் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சைக்காக அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஏற்கெனவே முத்தூஸ், லட்சுமி ஆகிய இரு மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மனு மருத்துவமனை உட்பட மேலும் மூன்று மருத்துவமனைகள் மீது வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான மனு மருத்துவமனை மீது இன்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்ககப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை அளித்தார். அதில் தனது அண்ணன் மகள் ஆனந்தி, மருமகன் சின்னத்துரை, அண்ணி கற்பகம் ஆகியோர் கொரோனா காரணமாக மனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆனந்தியும், சின்னத்துரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கற்பகம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்று பேரின் சிகிச்சைக்காக மனு மருத்துவமனை நிர்வாகம் 29 லட்ச ரூபாய் விதித்துள்ளது.
இதில் 10 லட்சத்திற்கு மட்டுமே தங்களுக்கு ரசீது வழங்கியிருப்பதாகவும், மீதி் 19 லட்ச ரூபாய்க்கு பில் கொடுக்காமல் அலைகழிப்பதாகவும், பணமாகவே கட்டணத்தை செலுத்தும்படியும் ஆன்லைன் டிரான்சாக்ஸன் செய்ய அனிமதிப்பதில்லை எனவும் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை வழங்கியதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் கட்டிய தொகைக்கு பில் கொடுக்கவும், கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்ததற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக, இந்த மருத்துவமனை இரண்டு புகார்கள் வந்துள்ள நிலையில், இன்று அதே மருத்துவமனை மீது மூன்றாவதாக புகாரும் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.