கோவை மனு மருத்துவமனையில் கூடுதல் கொரோனா சிகிச்சை கட்டணம்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒருவர் புகார்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக கோவை சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் பெறப்படும் மருத்துவ சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக கோவை சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துவமனையில் பெறப்படும் மருத்துவ சிகிச்சைக் கட்டணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவையில் தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சைக்காக அதிகக் கட்டணம் வசூல் செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஏற்கெனவே முத்தூஸ், லட்சுமி ஆகிய இரு மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மனு மருத்துவமனை உட்பட மேலும் மூன்று மருத்துவமனைகள் மீது வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.



இந்தநிலையில், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான மனு மருத்துவமனை மீது இன்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்ககப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை அளித்தார். அதில் தனது அண்ணன் மகள் ஆனந்தி, மருமகன் சின்னத்துரை, அண்ணி கற்பகம் ஆகியோர் கொரோனா காரணமாக மனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆனந்தியும், சின்னத்துரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கற்பகம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்று பேரின் சிகிச்சைக்காக மனு மருத்துவமனை நிர்வாகம் 29 லட்ச ரூபாய் விதித்துள்ளது.



இதில் 10 லட்சத்திற்கு மட்டுமே தங்களுக்கு ரசீது வழங்கியிருப்பதாகவும், மீதி் 19 லட்ச ரூபாய்க்கு பில் கொடுக்காமல் அலைகழிப்பதாகவும், பணமாகவே கட்டணத்தை செலுத்தும்படியும் ஆன்லைன் டிரான்சாக்ஸன் செய்ய அனிமதிப்பதில்லை எனவும் மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை வழங்கியதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் கட்டிய தொகைக்கு பில் கொடுக்கவும், கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்ததற்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் வலியுறுத்தினர். ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக, இந்த மருத்துவமனை இரண்டு புகார்கள் வந்துள்ள நிலையில், இன்று அதே மருத்துவமனை மீது மூன்றாவதாக புகாரும் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...