தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசு வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிப்பு: பதிவினைப் புதுப்பிக்க முடியாமல் பலர் தவிப்பு

கோவை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பதிவினை ஆன்லைனில் புதுப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியபோதும் அதை நிறைவேற்ற முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரிப் பேராசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பதிவினை ஆன்லைனில் புதுப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியபோதும் அதை நிறைவேற்ற முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரிப் பேராசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கல்லூரி பேராசிரியர் ஜெயசீலன், ‘‘வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2017 / 18 / 19ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்கு மேற்குறிப்பிட்ட மூன்று ஆண்டுகள் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.



ஆனால், இதற்கு முயற்சியை மேற்கொண்ட பொழுது தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்கள் பதிவினை ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை எனவும் பலர் என்னிடம் தெரிவித்தனர். நானும் அந்த வலைத்தளத்தில் முயற்சி செய்தபோது அவர்கள் கூறிய புகார் உண்மை என தெரியவந்தது.



பதிவினைப் புதுப்பிக்க பெயர் மற்றும் பாஸ்வேர்டு சரியான முறையில் பதிவு செய்யும் போதும் அது தவறு என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் பொழுது வலைத்தளம் பக்கத்தில் உள்ளே செல்ல முடிகிறது ஆனால், பதிவினைப் புதுப்பிக்க டைப் செய்யும் பொழுது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விடுகிறது.

தமிழக அரசு அரிய வாய்ப்பு வழங்கிய போதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவினைப் புதுப்பித்துக் கொள்ள முடியாமல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...