கோவை: வால்பாறை நகராட்சியில் கூடும் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை நகராட்சியில் கூடும் பொதுமக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனிடையே, வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று வால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்தில் கூடிய கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் பணியாளர்களுக்குக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வழங்கப்பட்டு வருகிறது.
வால்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த சுமார் 50 சத்துணவு பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நின்றனர். இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனிடையே, வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று வால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்தில் கூடிய கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் பணியாளர்களுக்குக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வழங்கப்பட்டு வருகிறது.
வால்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த சுமார் 50 சத்துணவு பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நின்றனர். இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.