திருப்பூரில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்..! அனைத்து மளிகை, காய்கறி கடைகளும் திறப்பு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அனைத்து மளிகை, காய்கறி கடைகளும் திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அனைத்து மளிகை, காய்கறி கடைகளும் திறக்கப்பட்டது.

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடரும் நிலையில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

குறிப்பாக, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிகளவில் கடைகள் வைத்து இருந்தனர். கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை மளிகை கடைகள் திறக்கப்பட்டது.



இதன் காரணமாக காலை முதலே பொதுமக்கள் காய்கறி கடைகளிலும், மளிகை கடைகளிலும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து உள்ளதால் சாலைகளில் குறைவான அளவிலேயே வாகனங்களின் இயக்கத்தை காணமுடிந்தது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...