பொள்ளாச்சியில் சிறுமிகளை வன்கொடுமை செய்த இருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்களான சரவணகுமார் மற்றும் சின்னதுரை இருவரும் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இரண்டு 15 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்களான சரவணகுமார் மற்றும் சின்னதுரை இருவரும் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்த இரண்டு 15 வயது சிறுமிகளுக்கு வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(28) அவரது உறவினர் சின்னதுரை (30)இருவரும் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். அப்போது அங்கு அவருடன் பணியாற்றிய இரண்டு 15 வயது சிறுமிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று சிறுமிகளைக் காணவில்லை என்று பெற்றோர் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சரவணகுமார் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் கைது செய்து சிறுமிகளை மீட்டனர்.

பின்னர், சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து,

கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மகளிர் போலீஸார் மேற்கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...