மரங்களுக்கு மறுவாழ்வு அளித்த ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா



கோவை முதல் பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, அந்த சாலையில் உள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை பணியினை மேற்கொண்ட வேலையில் அந்த மரங்களை மாற்று இடத்தில் நட அனுமதி வழங்கக் கோரி ஓசை மற்றும் பசுதைதேசம் தன்னார்வலர்கள் பொள்ளாச்சி துணை ஆட்சியர் நிர்வாகத்திடம் அனுமதிகோரினர்.

அதன்படி, கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்த சுமார் 19-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் அகற்றி அந்த சாலையில் அமைந்துள்ள ரத்தினம் கல்வி நிறுவனம், கோவில்பாளையம் வருவாய் துறை அலுவலக வளாகம், ஆச்சிப்பட்டியில் அமைந்துள்ள திசா பள்ளி, செட்டிபாளையத்தில் உள்ள ஃபையர் பெர்ட் (Fire Bird) நிறுவனம், மதுக்கரை சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம், ரத்தினம் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடப்பட்டு தற்போது அந்த மரங்கள் மறுவாழ்வு பெற்றது போல் துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளன.

இதனைத்தொடர்ந்து, இந்த மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட்ட ஓசை சையத் மற்றும் பசுமை தேசம் இராஜேந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஓசை தன்னார்வலர் அமைப்பின் சார்பில் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட வன அலுவலர் பத்திரசாமி பங்கேற்றார்.







இந்நிகழ்வில், ஓசை சையத் மற்றும் பசுமை தேசம் இராஜேந்தர் ஆகியோர் பேசியதாவது:-

கோவை முதல் பொள்ளாச்சி சாலையில் மரங்கள் நிரைந்து உள்ளன. அதனை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தடுத்து, மரங்களை மாற்று இடத்தில் நட்டு பராமறிக்க பொள்ளாச்சி துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டு தற்போது அந்த சாலையில் இருந்த மரங்கள் பல நிறுவனங்களில் நடப்பட்டுள்ளது. இன்னும் மீதமுள்ள 90க்கும் மேற்பட்ட மரங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கு அந்த சாலையில் உள்ள கல்லூரி, பள்ளி மற்றும் நிறுவனங்கள் அனுமதி அளித்தால் அந்த மரங்களை நட்டு பராமறிக்க முடியும்.

மரத்தினை வேருடன் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றுவது என்பது சாதாரண செயல் அல்ல. மின்சார கம்பம், தரைக்கு அடியில் தொலைபேசி இணைப்புகள், தண்ணீர் குழாய் என பல பிரிவுகளிடம் அனுமதி பெற்று சேதங்கள் இன்றி செய்ய வேண்டும். இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து பணியாற்றிய ராக், சிறுதுளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தன்னார்வலர் அமைப்பினர்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என அவர்கள் கூறினர்.



Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...