கோவையில் கொலை வழிப்பறி கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை: கோவை காவல் துறையினர் கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடியை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.


கோவை: கோவை காவல் துறையினர் கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடியை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் புதூரைச் சேர்ந்தவர் தனஞ்செயன் என்ற தொட்டி ஜெயா(34), பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, கோவை போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் மட்டும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கோவை வீர கேரளத்தில் உள்ள சுடுகாட்டில் தர்மலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து வடவள்ளி போலீஸார் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் தனஞ்செயன் சம்பந்தப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்தனர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த தனஞ்செயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் நேற்று அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீஸார் கோவை மத்திய சிறையில் இன்று அதிகாரிகளிடம் வழங்கினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...