கோவை பீளமேடு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது..!

கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை பீளமேடு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த கொண்டிருந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோவை பீளமேடு பகுதியில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த கொண்டிருந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மது கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுவது தெரிந்து, அவர்களுக்கு விற்பதற்காக ஒரு சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

நேற்று கோவையில் இருவேறு இடங்களில் டாஸ்மாக் கடையை உடைத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் டாஸ்மார்க் இருக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோரை போலீஸார் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கோவையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீளமேடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திக் வயது 25, என்பவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 101மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...