கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
கோவை: வால்பாறையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்படி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தால் 116 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள வசதிகள் எவ்வளவு காலத்தில் கட்டி முடிக்கப்படும் போன்ற விவரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பணிகள் தடங்கலின்றி நடைபெற தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகரச் செயலாளர் பால்பாண்டி, கோழிக்கடை கணேசன், JBR பாஸ்கர், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்படி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தால் 116 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வீடுகளில் உள்ள வசதிகள் எவ்வளவு காலத்தில் கட்டி முடிக்கப்படும் போன்ற விவரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், எவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பணிகள் தடங்கலின்றி நடைபெற தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நகரச் செயலாளர் பால்பாண்டி, கோழிக்கடை கணேசன், JBR பாஸ்கர், மகுடீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.