பொள்ளாச்சி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகராட்சி சார்பில் பொள்ளாச்சியில் 36 வார்டுகளிலும் 15 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகராட்சி சார்பில் பொள்ளாச்சியில் 36 வார்டுகளிலும் 15 நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, பழங்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடி காய்கறிகள் விநியோகம் செய்யும் பணிகள் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளுக்கும் காய்கறி விநியோகம் செய்யும் வகையில் வேளாண் துறை மற்றும் உழவர் சந்தை மூலமாக காய்கறிகள் கொள்முதல் செய்து 15 வாகனங்கள் மூலம் வார்டு வாரியாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து காய்கறிகளும் மலிவு விலையில் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறிகளை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, பழங்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு தேடி காய்கறிகள் விநியோகம் செய்யும் பணிகள் நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளுக்கும் காய்கறி விநியோகம் செய்யும் வகையில் வேளாண் துறை மற்றும் உழவர் சந்தை மூலமாக காய்கறிகள் கொள்முதல் செய்து 15 வாகனங்கள் மூலம் வார்டு வாரியாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று காய்கறி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து காய்கறிகளும் மலிவு விலையில் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறிகளை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.