பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆறு மயில்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா என்று வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆறு மயில்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது. விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா என்று வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த செஞ்சேரிமலை, நகரகளந்தை என்ற கிராமத்தில் உள்ள சிவக்குமார் என்பவரது தோட்டத்தில், 1 ஆண் மயிலும், 4 பெண் மயில்களும், அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் 1 பெண் மயிலும் என 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றினார். மேலும், மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில், இறந்து கிடந்த மயில்களின் உடல்களை கால்நடை மருத்துவர்கள் மூலம், உடற்கூறு ஆய்வு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தோட்டத்து உரிமையாளர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த செஞ்சேரிமலை, நகரகளந்தை என்ற கிராமத்தில் உள்ள சிவக்குமார் என்பவரது தோட்டத்தில், 1 ஆண் மயிலும், 4 பெண் மயில்களும், அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் 1 பெண் மயிலும் என 6 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றினார். மேலும், மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில், இறந்து கிடந்த மயில்களின் உடல்களை கால்நடை மருத்துவர்கள் மூலம், உடற்கூறு ஆய்வு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தோட்டத்து உரிமையாளர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.