வால்பாறை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
வால்பாறை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அதைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று விரைவில் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் மக்கள், கூட்டம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துவிட ஸ்டான் மோர் சாலை, நல்ல காத்து பாலம், நடுமலை பாலம், புதுத் தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகருக்கு வருபவர்கள் அனைவரையும் சோதனை செய்து விசாரணைக்குப் பின் அவர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பணிகளை வால்பாறை வட்டாட்சியர் ராஜா, நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அதைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று விரைவில் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் மக்கள், கூட்டம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துவிட ஸ்டான் மோர் சாலை, நல்ல காத்து பாலம், நடுமலை பாலம், புதுத் தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகருக்கு வருபவர்கள் அனைவரையும் சோதனை செய்து விசாரணைக்குப் பின் அவர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பணிகளை வால்பாறை வட்டாட்சியர் ராஜா, நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.