திருப்பூரில் ஊரடங்கு விதிமீறிலில் ஈடுபடும் பொதுமக்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காவல்துறையினர்!

திருப்பூர்: ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூரில் காவல்துறையினர் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூரில் காவல்துறையினர் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவு வெளியிட்டிருந்த சூழ்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் சிலவற்றை குறைத்து, கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.



இதனால், நேற்றைய தினம் முதல் இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்கள் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்று திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் அடைக்கப்பட்டு காவல்துறையினர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுகிறார்களா என்பதை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கத் தொடங்கினர்.

மேலும், இ-பதிவு முறையில் பதிவு செய்தவர்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...