வால்பாறையில் பெய்த தொடர் மழையால் மண் சரிந்து வீடுகள் சேதம்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை நகரின் ஒரு பகுதியாக உள்ள அண்ணா நகர் பகுதியில் நேற்று மாலை தடுப்பு சுவரின் மண் சரிந்து விழுந்ததில் கீழே உள்ள இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இந்த மண் சரிவினால் சிவகுமார், லட்சுமணன் ஆகிய இருவருடைய வீட்டின் பின்பக்கம் உள்ள குளியலறை கழிப்பறை சேதமடைந்தது.



இதன் காரணமாக அங்கு இருந்த பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. வால்பாறை வட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா கூறுகையில், வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு மிகுந்த இடத்தில் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...