சென்னை: கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி தி சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
சென்னை: கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி தி சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிப்பணிகளுக்காக நிதி வழங்கி வருகின்றன. அவ்வகையில், தி சென்னை சில்க்ஸ். ஸ்ரீ குமரன் தங்கமாளிகை, SCM குழுமத்தின் சார்பாக, நிர்வாக இயக்குநர் N.K.நந்தகோபால், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி A.C.வினீத்குமார் ஆகியோர், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (15.05.2021) தலைமைச் செயலகத்தில் சந்தித்து நிதி வழங்கினார்கள். தி.மு.க இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அப்போது உடனிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிப்பணிகளுக்காக நிதி வழங்கி வருகின்றன. அவ்வகையில், தி சென்னை சில்க்ஸ். ஸ்ரீ குமரன் தங்கமாளிகை, SCM குழுமத்தின் சார்பாக, நிர்வாக இயக்குநர் N.K.நந்தகோபால், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி A.C.வினீத்குமார் ஆகியோர், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (15.05.2021) தலைமைச் செயலகத்தில் சந்தித்து நிதி வழங்கினார்கள். தி.மு.க இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அப்போது உடனிருந்தார்.