கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் தொடர்ந்து இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்றால் தொடர்ந்து இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு சென்று தரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே 80 ஆவது வார்டில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர் பிரியா கிருஷ்ணன் என்பவர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். இதேபோல், 81 ஆவது வார்டில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது, சக பணியாளர்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அண்ணல் அம்பேத்கர் பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு செல்வம்,
‘‘கொரோனா நோய்த்தடுப்பு களப்பணிகளில் மாநகர சுகாதார பிரிவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றிய போதும், இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கொரோனாவால் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இருவரின் இறப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அனைவரின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். மேலும், மாநகரில் உரிய பாதுகாப்பின்றி பணியாற்றும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சோப்பு திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, காய்கறி உள்ளிட்டவற்றை கொண்டு சென்று தரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே 80 ஆவது வார்டில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர் பிரியா கிருஷ்ணன் என்பவர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். இதேபோல், 81 ஆவது வார்டில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பது, சக பணியாளர்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அண்ணல் அம்பேத்கர் பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு செல்வம்,
‘‘கொரோனா நோய்த்தடுப்பு களப்பணிகளில் மாநகர சுகாதார பிரிவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றிய போதும், இரண்டு தூய்மைப் பணியாளர்கள் கொரோனாவால் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இருவரின் இறப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகமும் சுகாதார துறையும் ஆய்வு செய்ய வேண்டும். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அனைவரின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். மேலும், மாநகரில் உரிய பாதுகாப்பின்றி பணியாற்றும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சோப்பு திரவம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.