கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.
கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.
கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கிற்கு கிழக்கே இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், ஜனவரி மாதம் கோவையில் தேர்த்திருவிழா நடத்தப்படும். விழாவையொட்டி பல்வேறு சொற்பொழிவுகள், அன்னதானங்கள் நடைபெறும். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில், இஸ்கான் அமைப்பு சார்பில், கோவையில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.
அதேபோல, தற்போதும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்க, இஸ்கான் திட்டமிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள், தங்கள் தேவை, முகவரியை, 82708 40006 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவிட்டால், வீடு தேடி வந்து சேரும் சுவையான உணவு!
கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கிற்கு கிழக்கே இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்நாதர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும், ஜனவரி மாதம் கோவையில் தேர்த்திருவிழா நடத்தப்படும். விழாவையொட்டி பல்வேறு சொற்பொழிவுகள், அன்னதானங்கள் நடைபெறும். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில், இஸ்கான் அமைப்பு சார்பில், கோவையில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.
அதேபோல, தற்போதும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்க, இஸ்கான் திட்டமிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள், தங்கள் தேவை, முகவரியை, 82708 40006 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவிட்டால், வீடு தேடி வந்து சேரும் சுவையான உணவு!