கோவை மதுக்கரை அருகே குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை மதுக்கரை அருகே குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மதுக்கரை அருகே குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மதுக்கரை, மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன் ஆசிப் பாஷா, 17. நேற்று காலை அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள கல்லுக்குழிக்கு, 12 வயதான தனது நண்பனுடன், குளிக்க சென்றான்.

அங்கு சுமார், 40 அடி ஆழமுள்ள கல்லுக்குழியில், 20 அடிக்கு சேறு கலந்த நீர் உள்ளது. இதில் குதித்த ஆசிப் பாஷா வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த உடன் சென்ற சிறுவன், அருகேயுள்ள தோட்டத்தின் உரிமையாளர் சண்முகத்திடம் சென்று, சம்பவம் குறித்து கூறியுள்ளான்.

இதையடுத்து, சண்முகம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், இரவு, 7:00 மணி வரை தேடியும் சடலத்தை மீட்க முடியவில்லை. பண்டிகை நாளில் சிறுவன் நீரில் மூழ்கியது, அப்பகுதியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...