கனமழை... நிலச்சரிவு முன்னெச்சரிக்கை... கோவை... மதுரையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாம்..!

கோவை: அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை, நிலச்சரிவு முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கோவை மற்றும் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.


கோவை: அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை, நிலச்சரிவு முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கோவை மற்றும் மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும், ‘தவுக்தே' புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகம், கேரளாவில், புயல், மழை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை, மதுரை மாவட்டங்களுக்கு தலா இரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவை வந்துள்ள மீட்புப் படையினர், 44 பேரும் துடியலூரில் முகாமிட்டுள்ளனர். இந்தநிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள், ‘‘தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள், கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், இடுக்கி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மீட்பு பணி மேற்கொள்ள, 13 குழுக்களைச் சேர்ந்த, 260 வீரர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், மேலும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.'' என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...