கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு உறுப்பினர் ஆறுமுகம், திமுக தொழிற்சங்க தலைவர் வினோத், விடுதலை சிறுத்தை கட்சி தொழிற்சங்க தலைவர் கேசவன் முருகன்உள்ளிட்டோர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;
“வால்பாறையில் 56 தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் 5 மணி வரை என பணியாற்றுகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே தேயிலை தோட்டப் பகுதிகளில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. போதுமான கொரோனா தடுப்பு உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கவில்லை.
பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அனுமதிக்கவில்லை. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைக்க வேண்டும். அதன் பின்பு அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தர வேண்டும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.” இவ்வாறு திமுக கூட்டணி கட்சியினர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு உறுப்பினர் ஆறுமுகம், திமுக தொழிற்சங்க தலைவர் வினோத், விடுதலை சிறுத்தை கட்சி தொழிற்சங்க தலைவர் கேசவன் முருகன்உள்ளிட்டோர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;
“வால்பாறையில் 56 தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் 5 மணி வரை என பணியாற்றுகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே தேயிலை தோட்டப் பகுதிகளில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. போதுமான கொரோனா தடுப்பு உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கவில்லை.
பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அனுமதிக்கவில்லை. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைக்க வேண்டும். அதன் பின்பு அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தர வேண்டும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.” இவ்வாறு திமுக கூட்டணி கட்சியினர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.