பொள்ளாச்சி அருகே மனைவியுடன் பழகிய நபரை வெட்டிய கணவர் கைது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியுடன் பழகிய நபரை வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியுடன் பழகிய நபரை வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்காளியூரைச் சேர்ந்த காளிமுத்து(32), அவரது மனைவி நந்தினி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். நந்தினி கோட்டூரில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், பொங்காளியூரைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், காளிமுத்து நேற்று முன்தினம் இரவு மனைவியின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வீட்டில் விஷ்ணுபிரசாத் இருந்ததாக தெரிகிறது.

அப்போது காளிமுத்து, விஷ்ணுபிரசாத் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. அந்த சமயத்தில் அங்கிருந்த அரிவாளை எடுத்த காளிமுத்து விஷ்ணு பிரசாத்தை வெட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த விஷ்ணுபிரசாத்தை உறவினர்கள் மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷ்ணுபிரசாத் புகாரின் அடிப்படையில் போலீசார் காளிமுத்து மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...