சிறப்பான முறையில் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் கோவை விமான நிலையம்!

கோவை: கோவை விமான நிலையம் சிறப்பான முறையில் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதால் இன்று வரை பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை விமான நிலையம் சிறப்பான முறையில் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதால் இன்று வரை பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள், ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றைத் தடுக்ககடந்த ஓராண்டுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டும் விதிமுறைகளைஅமல்படுத்தி வருகின்றன. இந்த வழிகாட்டி விதிமுறைகளை சிறப்பான முறையில் பின்பற்றி வரும் காரணத்தால் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று வரை பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டனர். நோய் தொற்றில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்.

இது குறித்து கோவை ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில்,"கோவை சர்வதேச விமான நிலையத்தில் வழிகாட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி, கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதிகாரிகளாக இருந்தாலும் ஊழியர்களாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அனைவரும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய ஒரு இடத்தில் கடந்த ஓராண்டாக பத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர். அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றக்கூடிய ஒரு இடத்தில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்துவதில் கோவை விமான நிலையம் முன்மாதிரியாக விளங்குவதில் சந்தேகமில்லை. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பே காரணம்,"என தெரிவித்தன.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...