கோவை: கோவையில் ஒரே நாளில் அனைத்து ‘ரெம்டெசிவிர்' மருந்துகளும் விற்றுத் தீர்ந்ததால், எல்லோருக்கும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் ஒரே நாளில் அனைத்து ‘ரெம்டெசிவிர்' மருந்துகளும் விற்றுத் தீர்ந்ததால், எல்லோருக்கும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து, குறைந்த விலையில் கிடைக்க, நேற்று முன்தினம் முதல், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விற்பனை தொடங்கியது. விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட, 500 ‘வயல்'களும், நேற்று முன்தினம், ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. நேற்று விடுமுறை என்பதை அறியாத பலரும், மருத்துவக் கல்லூரியில் அதிகாலை முதல், மருந்து வாங்க காத்திருந்தனர்.
இந்தநிலையில், மருந்து விநியோகம் இல்லை என, மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று வந்து மருந்து வாங்கிக் கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ‘‘ரெம்டெசிவிர், தமிழ்நாடு மருந்து விநியோகக் கழகமான, டி.என்.எம்.எஸ்.சி., மூலமே, நமக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 500 வயல்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக வழங்குவது குறித்து, டி.என்.எம்.எஸ்.சி.தான் முடிவெடுக்க வேண்டும். மருந்து வேண்டி வந்தவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில், மருந்து வழங்கப்படும்,'' என்றார்.
கொரோனாவால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து, குறைந்த விலையில் கிடைக்க, நேற்று முன்தினம் முதல், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விற்பனை தொடங்கியது. விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட, 500 ‘வயல்'களும், நேற்று முன்தினம், ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. நேற்று விடுமுறை என்பதை அறியாத பலரும், மருத்துவக் கல்லூரியில் அதிகாலை முதல், மருந்து வாங்க காத்திருந்தனர்.
இந்தநிலையில், மருந்து விநியோகம் இல்லை என, மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று வந்து மருந்து வாங்கிக் கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ‘‘ரெம்டெசிவிர், தமிழ்நாடு மருந்து விநியோகக் கழகமான, டி.என்.எம்.எஸ்.சி., மூலமே, நமக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 500 வயல்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக வழங்குவது குறித்து, டி.என்.எம்.எஸ்.சி.தான் முடிவெடுக்க வேண்டும். மருந்து வேண்டி வந்தவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில், மருந்து வழங்கப்படும்,'' என்றார்.